Iruvar - Lyric

பாடல்: கண்ணைக் கட்டிக் கொள்ளாதே
குரல் ஹரிஹரன் குழுவினர்
வரிகள்: வைரமுத்து

வி…டு…த…லை…விடுதலை
வி…டு…த…லை…விடுதலை

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கைக் குயிலாய் ஆகாதே தோழா
தாடிகளெல்லாம் தாகூரா மீசைகளெல்லாம் பாரதியா
வேஷத்தில் ஏமாறாதே தோழா
நம் மடியினில் கனமில்லையே…பயமில்லையே…
மனதினில் கரையில்லையே…குறையில்லையே…
நினைத்தது முடியும் வரை…

(கண்ணைக் கட்டிக்)

வி…டு…த…லை…விடுதலை
வி…டு…த…லை…விடுதலை

தோழா…தோழா…லாலல்லா
தோழா…தோழா…லாலல்லா

மக்கள் மக்கள் என் பக்கம் மாலைத் தென்றல் என் பக்கம்
சிட்டுக் குருவிகள் என் பக்கம் செடிகள் கொடிகள் என் பக்கம்
ஏழைத் தமிழர் என் பக்கம் என்றும் தாய்க்குலம் என்பக்கம்
எட்டுத்திக்கும் என் பக்கம் அட கலங்காதே
கோழை மட்டுமே கத்தியெடுப்பாம் வீரன் மட்டும் சத்தியத்தை நம்புவானே
ஏழை வர்க்கமே இணைந்துவிட்டால் கொடிகளும் கோட்டையும் நொடியினில் மாறிவிடும்

(கண்ணைக் கட்டிக்)

வெளியே போகச் சொல்லாதே நான் வீழ்வேன் என்று எண்ணாதே
தங்கக் காசை வீசுவதால் தர்மம் கையை ஏந்தாதே
வெள்ளி மழை சிந்தும் மழை மேகம் விளம்பரம் கொடுத்தால் பொழியாது
மக்கள் சக்தி காசுக்கு வளையாது அட பணியாது
விடிவெள்ளிதான் முளைக்கும்வரை இருள் மட்டும் ஆட்சியில் இருக்குமடா
கிழக்குமுகம் வெளுத்துவிட்டால் இருளுக்கு முடிவுண்டு எங்களுக்கு விடிவுண்டு

(கண்ணைக் கட்டிக்)

வி…டு…த…லை…விடுதலை
வி…டு…த…லை…விடுதலை

தோழா…தோழா…லாலல்லா
தோழா…தோழா…லாலல்லா
——————————————————————————–

பாடல்: ஆயிரத்தில் நான் ஒருவன்
குர மனோ குழுவினர்
வரிகள்: வைரமுத்து

ஆயிரத்தில் நான் ஒருவன் நீங்கள் ஆணையிட்டால் படைத் தலைவன்
நான் நினைத்தால் நினைத்தது நடக்கும் நடந்தபின்
ஏழையின் பூமுகம் சிரிக்கும்
நான் அழைத்தால் மலைகளும் நதியும் கடல்களும்
ஊருக்குள் ஊர்வலம் நடத்தும்
இந்த உலகம் கதவடைத்தால் எட்டி உதைப்பேன் அது திறக்கும்
குனிந்த உள்ளம் துணிந்து விட்டால் ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும்

(ஆயிரத்தில்)

அரசனாகட்டுமே அரசியாகட்டுமே
குற்றங்கள் யார் செய்தாலும் தட்டிக் கட்டுத் தடுப்பேன் தர்மத்தின் பக்கம் இருப்பேன்
நெற்றியின் வேர்வைத்துளி நிலத்தில் வீழ்வதற்குள்
உழைத்த மக்களுக்குக் கூலிவாங்கிக் கொடுப்பேன் உண்மைக்குக் காவல் இருப்பேன்
இந்த உலகம் கதவடைத்தால் எட்டி உதைப்பேன் அது திறக்கும்
குனிந்த உள்ளம் துனிந்து விட்டால் ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும்

(ஆயிரத்தில்)

புரட்சி மலரட்டுமே புன்னகை தவழட்டுமே
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஒவ்வொரு சூரியன் சொந்தத்தில் ஜொலிக்கட்டுமே
வாழ்க்கை விடியட்டுமே வறுமை ஒழியட்டுமே
உழைக்கும் மக்களுக்கு உலகங்கள் சொந்தம் உண்மைகள் தெளியட்டுமே
இனி எழுஞாயிறு எழுக இந்த இருள் கூட்டங்கள் ஒழிக
பழைய பகை படையெடுத்தால் கத்தி புத்தி ரெண்டும் கொண்டு வென்றுவிடுக

(ஆயிரத்தில்)
——————————————————————————–

பாடல்: HELLO MISTER எதிர்க்கட்சி
குர ஹரிணி
வரிகள்: வைரமுத்து

HELLO MISTER எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலு என்னாச்சு
காத்து காத்து நாலாச்சு பதினெட்டு வயசாச்சு
HELLO MISTER எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலு என்னாச்சு
காத்து கத்து நாலாச்சு பதினெட்டு வயசாச்சு
காதலா காதலா உனைனான் விடமாட்டேன்
கைத்தலம் பற்றுவேன் பிரியவிடமாட்டேன்
கண்கள் மீனாடை அழகு மீதாட விடவே விடமாட்டேன்

(HELLO MISTER)

கண்ணை நான் பிரிந்தால் காதல் பூ உதிர்ந்தால்
உள்ளத்தில் உலகப் போர் மூளுமே
நீயென்னை மறந்தால் நில்லாமல் மறைந்தால்
என் கண்கள் பாலைவனமாகுமே
பருவங்கள் சந்தித்தால் பிரிவொன்று உண்டாகும்
துருவங்கள் சந்தித்தால் பிரியாது என்னாளும்
கம்பன் பார்த்தால் காவியம் உருவாகும்

(HELLO MISTER)

மண்ணை வேர்கள் பிரிந்தாலும் விண்ணை நீலம் பிரிந்தாலும்
கண்ணை மணிகள் பிரிந்தாலும் உனை நான் பிரியேன்
சங்கம் தமிழைப் பிரிந்தாலும் சத்தம் இசையைப் பிரிந்தாலும்
தாளம் சுருதியைப் பிரிந்தாலும் உனை நான் பிரிகிலேன்
உன்னோடு வாழத்தான் என் அன்னை பெற்றாளோ
உன்னோடு சேரத்தான் விதி மன்னன் இட்டானோ
உன்னைப் பார்த்த நாள்தான் பொன்னாளோ

(HELLO MISTER)
——————————————————————————–

பாடல் வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே
குர ஆஷா போன்ஸ்லே
வரிகள்: வைரமுத்து

வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல்
கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல்
தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல்

(வெண்ணிலா)

என்னவா என்னவா எது கண்டு மையல் ஆனாய்
எதனால் எதனால் இமை கடந்து கண்ணாய்ப் போனாய்
நீயெங்கோ பிறந்தாய் நானெங்கோ பிறந்தேன்
ஒரே ஒரு பார்வையால் உயிரைக் குடித்தாய்

(வெண்ணிலா)

கண்களை மூடினால் கண் வந்து உள்ளம் கிள்ளும்
கட்டிலை நாடினால் இரவின்று நீளம் கொள்ளும்
வேரோடு துடிக்க யாரோடு உரைக்க
கனாக் கண்ட காட்சிகள் கையில் வருமா

(வெண்ணிலா)
——————————————————————————–

பாடல் நறுமுகையே நறுமுகையே
குர உன்னிகிருஷ்ணன், BOMBAY ஜெயஸ்ரீ
வரிகள்: வைரமுத்து

நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரள நீர்வடிய கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா (2)
திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில் ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா(2)

மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன
பாண்டினாடனைக் கண்டு என் மனம் பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும் (2)
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை இடையினில் மேகலை இருக்கவில்லை
நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில் ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அன்னினவில் நெற்றித்தரள நீர்வடிய கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா (2)

யாயும் யாயும் யாராகியரோனென்று நேர்ந்ததென்ன
யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன (2)
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன
திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்ப்பொய்கை ஆடுகையில் ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரள நீர்வடிய கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா (2)
——————————————————————————–

பாடல் பூ கொடியின் புன்னகை
குர சந்தியா
வரிகள்: வைரமுத்து

பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
அந்தப் பௌளர்ணமி என்பது ஒரு மாதத்தின் புன்னகை
உன் வருகையில் பூத்ததென்ன என் வாழ்க்கையின் புன்னகை
என் வாழ்க்கையின் புன்னகை

(பூ கொடியின்)

உனது நிழல் தரைவிழுந்தால் என் மடியில் ஏந்திக்கொள்வேன் அ அ அ
உனது நிழல் தரைவிழுந்தால் என் மடியில் ஏந்திக்கொள்வேன்
வான் மழையில் நீ நனைந்தால் தென்றல் கொண்டு நான் துடைப்பேன்
ஒரு நாள் எனை சோதித்துப் பார் ஒரு வார்த்தைக்கு உயிர் கொடுப்பேன்
ஒரு வார்த்தைக்கு உயிர் கொடுப்பேன்

(பூ கொடியின்)

நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை
நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை
சூரியனை இழந்துவிடால் கிழக்குக்கொரு திலகமில்லை
நீ ஒரு முறை திரும்பிக்கொண்டால் என் உயிருக்கு உறுதியில்லை
என் உயிருக்கு உறுதியில்லை

(பூ கொடியின்)